என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வெள்ளி சாமி சிலை கொள்ளை
நீங்கள் தேடியது "வெள்ளி சாமி சிலை கொள்ளை"
கும்பகோணம் அருகே வீடு புகுந்து ரூ.2½ லட்சம் மதிப்புள்ள வெள்ளி சாமி சிலைகள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே பந்தல்லூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது56). இவரது மனைவி சொர்ணலதா. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பூஜை அறையில் இருந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள வெள்ளியால் ஆன ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சிலைகளையும், சிறிய அளவிலான தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்று விட்டனராம்.
காலையில் எழுந்து பார்த்தபோது சுவாமி சிலைகள் காணாமல் போனது குறித்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணசாமி இதுகுறித்து பந்தநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளி சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X